Wednesday, February 25, 2009

கோவில்களில் பூணூல் அய்யர்வாள் , வலைப்பூக்களில் CPIML SOC மக இக அய்யர்வாள்

என்ன நண்பர்களே

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ?

நான் எப்பொழுதுதாவதுதான் இணையத்துக்கு வர இயலும். நான் மட்டுமல்ல இங்குள்ள பல தமிழுணர்வாளர்களும் அப்படிதான்.

ஆனால் எந்நேரமும் தமிழ்மணத்தில் நாம் CPIML SOC அய்யர்வாள்களைக்காணலாம்.

கோவில்களில் பூணூல் போட்ட அய்யர்வாள் என்றால் வலைப்பூக்களில் பூணூலின் மேல் செஞ்சட்டை போட்ட CPI ML SOC மக இக அய்யர்வாள்களைக்காணலாம்.

புரட்சி மார்க்சியம் என்று எந்நேரமும் வலைபூக்களில் எழுதிக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக வினருக்கு வேலையே குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதுதான் போலும் இல்லையென்றால் பி.இரயாகரனிடம் இருந்து தடசணை வராது அல்லவா.

கோவிலில் தட்டிலே காணிக்கை , இவர்களுக்கு தமிழர்களை குழப்பினால் பிரான்ஸ் இரயாகரனிடமிருந்து தட்சணை.

இங்கு ஆயுதப்புரட்சி என்று குழப்புவார்கள் , மற்ற இடத்தில் நடந்தால் அது பாசிச கொடுங்கோன்மை என்பார்கள். அவர்களின் ஏடான புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் போன்ற இந்து, தினமலம் போன்றவற்றிற்கு நிகரான பொறுத்தருளவும் இந்து , தினமலம் போன்றவற்றைவிட தமிழர்களை வெறிப்பிடிக்க வைத்து குழப்பும் இதழ்களான CPI ML SOC இதழ்களை பல ஆண்டுகளாக படித்து வருபவர்களுக்கு உண்மையில் மண்டை குழம்பி கீழ்பாக்கம் தான் போக வேண்டும்.


1998 இல் இட ஒதுக்கீடு கூடாது. இட ஒதுக்கீடு வேண்டாம் ,

2005 இல் இட ஒதுக்கீடுக்காக போராடும் ஒரே அமைப்பு நாங்கள்தான் என்பார்கள்.

இவர்களின் கட்சி திட்டத்தினை பார்த்தால் 85 இலட்சம் கோடி ஆண்டுகள் புனிதம் மிக்க நம் நாடு என்பார்கள்.

மார்க்சிய மூலக்கூறில் பொருள் முதல்வாதம் , கருத்து முதல்வாதம் ........ என்று பார்த்தால் மார்க்சு புனிதம் என்பதே தவறானது என்றுள்ளார் என்பார்கள்.


நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.

அந்தர் பல்டி என்றால் முறையாக அடிக்க cpi ml soc மக இக யிடம் கற்றுக்கொள்ளலாம்.

இவர்களது வேலை " பசியால் துடிக்கும் ஒருவனிடம் சென்று உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் இவர்கள்தான் உன்னைப்போல் ஆன மற்றவர்களை உன்னுடன் சேர்த்து அமைப்பாகி போராடு என்று அவனை குழப்பிவிட்டுவிட்டு போய்விடுவார்கள் "

தூண்டி விட்டுவிட்டு போய்விடுவார்கள் ஆனால் பசியில் இருக்கும் அவனுக்கு உணவு தரமாட்டார்கள்.

கேட்டால் இப்படி ஆயி அப்படி ஆயி இப்படி வந்து னு... இழுத்துக்கிட்டே போவார்கள்.

அவன் அப்படியே பசியாலும் மூளை குழம்பியதாலும் செத்து சீரழிவான்.

இதுதான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக விலிருக்கும் அடிமட்ட தொண்டனின் நிலை. இப்படிப்பட்ட நிலைதான் குளுகுளு அறையில் இராயகரனின் தட்சணைக்காக எழுதும் ஒருவரின் கருத்துப்படத்தினை வெளியிட்ட அந்த அப்பாவி 5 நபர்களின் நிலை.

மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆயுதமா?
அப்படியென்றால அதை நாம் எடுப்போம் - பார்ப்பனியர்கள்

இணையதளம் உலகம் முழுக்க தமிழர்களின் நிலையை சொல்லுமா அப்படியானால் இணையத்திலே நாம் தமிழால் தமிழர்களை குழப்புவோம் ஒன்று சேரவிடாமல் சிதைப்போம் - நவீன பார்ப்பனியர்கள்.

ஆனால் என்ன மக இக , புமாஇமு வில் உள்ள அடிமட்டத்திலுள்ள அத்தொண்டர்களுக்கு மக இக என்பதும் அரசியல் கட்சிதான் என்பதும் அவ்வளவாக தெரியாது. அவர்கள்தான் CPI ML SOC என்பது என்று அவர்களுக்கு அது தெளிவாக தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் தானாகவே மக இக விலிருந்து விலகுகிறார்கள். இதை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.

என்ன இன்னும் நம் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட பார்ப்பனியர்களின் தந்திரம் தெளிவாக தெரியவில்லை. வலைப்பூக்களின் உலாவும் தமிழர்களே தமிழினத்தினை சிதைக்கும் மக இக CPI ML SOC இடமிருந்து விழிபோடு இருங்கள்.

தமிழ் கம்பெனிக்களுக்கு தெரிந்த சுயபுராணமும் தெரியாத வரலாறும்

தமிழ்நாட்டிலே தமிழ் தமிழ் தமிழ் என்று வாய் நிறைய மேடையேறி சொல்லுபவர்கள் இதுவரை நடைமுறையில் எதுவும் செய்தது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

வெட்டி தம்பட்டம் அடிப்பதால் யாருக்கும் எவ்வித பயனும். அப்படி வெட்டி தம்பட்டம் அடிப்பவர்கள் தங்கள் சுய புராணத்தின் பொழுது வரலாற்றையே மாற்றிவிடுகிறார்கள்.

அப்படி வரலாறு தெரியாமல் தம்பட்டம் அடித்த ஒரு தமிழ் கம்பெனியாரின் சுயபுராணத்தினை கேட்க நேர்ந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் வழகுரைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழ ஆதரவு மாநாட்டின் குறுந்தகடு கிடைத்தது. அந்நிகழ்வில் 3 ஆம் முறையாக சிறை சென்ற இயக்குநரும் , பொடா வில் உள்ளே சென்றவன் நான் என்று மேடை தோறும் கொக்கரிக்கும் நியூகோட்டையூராரும் கலந்துகொண்டார்.

அந்த கோட்டையாரின் பேச்சை நாம் இதுவரை கேட்டதில்லை என்பதால். ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம் என்று போட்டுப்பார்த்தால். அந்நபர் பேசிய 1 மணி நேரத்தில் 55 நிமிடங்கள் சுயபுராணம் மட்டுமே இருந்தது.

அதில் சில " என்னை அந்த ஊரிலுள்ள பள்ளியில் அழைத்திருந்தார்கள் அங்கே பேசும் பொழுது திப்புச்ல்தானின் பெயர் புலி என்றேன் , மற்றொரு இடத்தில் பேசும்பொழுது சிறந்த விலங்கு புலி என்றேன் , மற்றொரு இடத்தில் மூவேந்தர்களின் கொடிகளில் ஒன்று புலிக்கொடி என்றேன் ,...... இப்படியே பழைய சுயபுராணம்தான் வந்தது நடுவில் ஒன்று சொன்னதைக்கேட்டு அந்நிகழ்வில் இருந்த இசுலாமிய பொதுமக்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எதற்கு சிரித்தார்கள் என்று சுயபுராணம் தலைக்கேறிய அவருக்கு புரியவில்லை.

அவர் சொல்லியது ... ' லிபியா நாட்டு போராளிகளின் தலைவரை பாலைவனப்புலி என்பார்கள் ' என்றார். இதைக்கேட்ட நமக்கும் சிரிப்புதான் வந்தது. பாலைவனத்து சிங்கம் உமார் முக்தாரை பாலைவனப்புலி என்று மாற்றிவிட்டார் தனது சுயபுராணத்திற்காக.

"LION of THE DESERT " எப்பொழுது " TIGER OF THE DESERT" ஆக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. பொடாவில் சென்று வந்தவன் என்று கூறிக்கொள்ளும் அந்நபருக்கு இச்சிறுதகவல் கூட தெரியவில்லையா அல்லது தெரிந்தே கூடி இருக்கும் மக்களிடம் தன் சுயபுராணத்திற்காக வரலாற்றினை மாற்றினாரா என்று தெரியவில்லை.

ஆனால் என்ன ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது , தமிழ் கம்பெனிகளுக்கு இதுதான் வியாபாரம் என்று.

கோட்டையூரை சேர்ந்தவர் கடைசி வரை சுயபுராணம் பாடியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமே அளித்திருக்கும்.

Monday, February 9, 2009

தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் மகஇகவினர்

தமிழகத்திலுள்ள மக்களிடத்திலே கருத்துக்களை சொல்ல திராணியற்ற மகஇக வினர் முல்லைத்தீவுக்கு படகு பயணமாம். ஈழத்தமிழர் , தமிழீழம் என்று சொல்லக்கூட தைரியமற்ற தனது கட்சி பேரான CPI-ML(SOC) என்பதனை கூட மக்களிடம் சொல்ல துணிவில்லா ஒட்டுக்குழுவினர் முல்லைத்தீவுக்கு பயணம் என்ற ஒரு காமெடி காதில் கேட்டதும். அப்பகுதியிலுள்ள என் மீனவ உறவினர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கடற்கரையிலிருந்து படகில் ஏறும்பொழுது அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் " சுய நிர்ணயம் வழங்கு " " இலங்கைத் தமிழர்களை கொல்லாதே " " சிங்கள இராசபக்சேவை கண்டிக்கிறோம் " இப்படி வாசகங்கள் இருந்ததாம். ஒரு இடத்தில் கூட ஈழம் என்றோ ஈழத்தமிழர்கள் என்றோ இல்லலயாம் .

அவர்களின் உரையினை கேட்ட மீனவர் ஒருவர் கூறிய வார்த்தை " இவன் யாரப்பா அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுக்க சொல்ல , ஒன்று பட்ட இலங்கையில் சுய நிர்ணய உரிமை கொண்ட ஒரு தமிழ் மாநிலம் எப்படி ? பசிக்கிறவனுக்கு எது வேணுமோ அதை அவன் தின்பான் , ஈழத்துல பசிக்கிற மக்களுக்கு எது திங்கனும்னு அவனுகளுக்கு தெரியும் இவனுக யாரப்பா இப்படி குழப்புறது , ஈழமக்கள் அவங்க விடுதலைக்கு தீர்வு தமிழீழம் , இந்த வக்கீல்மாரு என்ன சொல்ல வராருனு புரியலைங்களே " என்று கூறியதாக நமக்கு தகவல் வந்தது.

கடற்கரையிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் இருந்து கொண்டு செல்பேசியில் பேட்டி கொடுத்தார்களாம் "இன்னும் 2 மணி நேரத்தில் முல்லைத்தீவுக்கு சென்றுவிடுவோம் " என்று. ( BSNL , AIRCEL , AIRTEL , HUTCH TOWER லாம் முல்லைத்தீவுக்கு 2 மணி நேர தொலைவில் எப்ப போட்டாங்கனு மக இக கிட்டதான் கேட்கனும்) மீனவர்கள் மற்றும் கடல்சார்ந்த எம் மக்கள் வயிறு வலிக்க சிரிக்காத குறைதான். ஈழத்திலே வடகிழக்கில் இருப்பது முல்லைத்தீவு இவர்கள் படகில் இருந்ததோ தூத்துக்குடி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் இதுவோ தென்கிழக்கில். இலங்கைத்தீவினை சுற்றி செல்ல வேண்டும் முல்லைத்தீவுக்கு.

மக இகவினர் சரியாக காமெடி விடுறாங்க. நடிகர் வடிவேல் இனி மேல் மக இகவினர் கிட்ட காமெடி கற்றுக்கொள்ளலாம். படகில் இருக்கும் டீசல் டாங்க் அளவோ குறைவானது. மேலும் சர்வதேச கடல் எல்லைக்கே அப்படகு செல்லவில்லை. மகவினரே முதலில் ஈழத்திற்கான உங்கள் தீர்வு என்னவென்று சொல்லுங்கள். மேலும் இந்த போராட்டத்தினை அறிவித்தது தி.மு.கவினை சேர்ந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு என்பவர்தான்.

என்னமோ போங்க CPIMIL-SOC ( மக இக , ம.உ.பா) காமெடி தாங்க முடியலை. சிங்கள கைக்கூலி இராயகரன் என்னங்க சொன்னாரு இந்த பிரச்சினைக்கு ......?