Friday, August 29, 2008

எச்சரிக்கை: பொதுமக்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும்,அமைப்புக்களுக்கும் & பத்திரிக்கைகளுக்கும்

உலகமக்களே தந்தை பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கருத்துக்களும் தனியாருக்கு உடைமையானது. எனவே அனைத்து மக்களும் அமைப்புகளும் இயக்கங்களும் தந்தை பெரியார் என்ற பெயரையும் அவரது சிந்தனைகளையும் நீங்கள் உங்கள் மனதில் நினைக்கவோ எண்ணவோ கூடாது.

மேலும் அவரது ஒலி நாடாக்களை கேட்பதும் தடை செய்யப்படுகிறது. தந்தை பெரியாரின் படங்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது.
தந்தை பெரியாரின் படங்களும், ஒலிநாடாக்களும் புத்தகங்களும், அவரின் சிலைகளும் பெரியார் என்ற பெயரும் பெரியாரால் அமைக்கப்பட்ட அமைப்புக்கே உடைமையானது.
எனவே இந்த எச்சரிக்கையை மீறி யாரும் மேற்கண்டவனற்றை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் அவர்களின் மேல் வழக்கு தொடரப்படும்.
இப்படிக்கு
ஆயுட்கால செயலாளர்
பெரியார் கருத்துக்களை தடைசெய்யும் நிறுவனம்
டம்ளர் டலைவர்

Monday, August 25, 2008

பாரீர் திடல் அடிமைகளின் விசுவாசம்

நேற்று பத்திரிக்கையில் டம்ளர் டலைவரின் அடிமையின் கட்டுரையை காண நேர்ந்தது. அவர் இதுவரை பெரியாரின் இயக்கத்துக்கு 50 காசு கூட செலவு செய்திருப்பாரா என்று வெளிப்படையாக கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்..

அவர் எப்படி சொல்லுவார்... அவருக்கு திடலில் 10000 முதல் 12000 வரை திங்கள் தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எப்படி அவர் தன் சொந்தக்கருத்தை எழுத இயலும். முதலாளியின் கருத்தைதானே எழுத இயலும்.
தன் சொந்தக்கருத்தை எழுதினால் யார் அவருக்கு சம்பளம் தருவார்கள்.

பெரியார் சொன்னார் பொது வாழ்க்கைக்கு வருபவன் அவன் வீட்டு சோற்றை தின்றுவிட்டு மற்றவன் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும் என்று.


இதெல்லாம் அவர்களுக்கு எதுக்கு மக்களுக்காக வாழ்பவன் என்றால் இந்தக்கருத்துக்கள் மனதில் இருக்கும்.

குத்தூசியாரின் ஜாமீன் கட்டுரைகளுக்கு வந்த பணத்தில் வளர்ந்ததுதான் அந்த பத்திரிக்கையும் திடலும்... ஆனால் திடலில் இருப்பவர்களுக்கு குத்தூசி குருசாமி யார் என்றாலே இப்பொழுது தெரியாது.


மக்களுக்கு உழைத்த அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் இருட்டடிப்புச்செய்த இவர்களால் வேறு என்ன செய்ய இயலும். அவர்கள் சோறு திங்க இந்த வியாபாரம் தானே வேண்டும்.

மாதக்கூலி வாங்குபவர்கள் தன் வீட்டை அடமானம் வைத்து பெரியார் கொள்கைகளை விடுதலை செய்பவர்களை பார்த்து சொல்கிறார். பெரியாரிய வியாபாரி என்று.

சிரிக்கத்தான் தோன்றுகிறது. உங்கள் கட்டு....உரைகளைப்பார்த்து.

சரி சரி நாங்கள் சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் ஆயிற்றே நீங்கள். யார் பெரியார் கருத்தினை செயல்படுத்துகிறார் யார் பெரியாரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தமிழகக்காவல்துறையினரிடமே கேட்டுப்பாருங்கள்(Q). ஆதாரங்கள் அவர்களிடமே உள்ளது.

சூடு சுரணை உள்ள ஒருவன் திடலில் அதாவது டம்ளர் டலைவரின் பின்னால் இருந்தால் யார் பெரியாரியக்க தலைவரோ அவருடன் தோளோடு
தோள் கொடுக்க செல்லுங்கள். இங்கு நீங்கள் பின்னால் நிற்க தேவையில்லை. தலைவருக்கு நிகராகவே நீங்கள் நிற்கலாம்.

நல்ல தொண்டனே நல்ல தலைவன்.

நல்ல தலைவன் என்பவன் தொண்டனின் தோளோடு தோள் சேர்த்து நிற்பவனே.

வாருங்கள் தோழர்களே சாதியற்ற மதமற்ற பெரியாரிய பொதுவுடைமைச்சமுதாயம் படைப்போம் நல்ல தலைவன் துணையோடு .

Sunday, August 24, 2008

தமிழர் தலைவர்-யார்?

"ஒரு நல்ல தொண்டனே ஒரு நல்ல தலைவன்"

தமிழர்களின் விடுதலையை கடைசி வரை முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரை தமிழக மக்கள் தமிழர்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

தமிழர்தலைவர் தந்தை பெரியார் என்பது அனைத்து மக்களும் தெரியும். அவர் இறந்த பின்பு அவர் பட்டத்தை தனதாக்கிக்கொண்டவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருப்பான் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.

தமிழர் தலைவர் இருவர் மட்டுமே...

ஒருவர் தந்தை பெரியார்

அவர் இறந்துவிட்டார்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழினத்தை தலை நிமிர வைத்தவர் உலக முழுவதும் தமிழர்களாலும் அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் முப்படை கண்ட எங்கள் தம்பி மட்டுமே.

தமிழர்தலைவர்....

வீணாக உலகத்தமிழர்களிடம் அடிபடாதீர்கள்...

தமிழ்நாட்டுத்தமிழன் பேசமட்டும்தான் செய்வான். கிழக்கிலிருக்கும் தமிழன் அப்படியில்லை.. நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

Saturday, August 23, 2008

கருப்புச்சட்டை அணிந்த இரட்டை நாவு பார்ப்பான்

பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக சோவுக்கு இணையாக இருந்த பொழுது நமது எம்.ஜி.ஆர் விடுதலையில் திராவிடர் கழக கொடியினை வடிவமைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி இல்லை. அதை வடிவமைத்தவர் ஈரோட்டைச்சேர்ந்த ஒருவர் என்று அதன் ஆசிரியர் கூறினார் எழுதினார். ஆனால் இப்பொழுது வெளிவந்த இதழில் வடிவமைததவர் கலைஞர் தான் என்கிறார்.

நானும் விடுதலையை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். புரியவே மாட்டேங்குது. பார்ப்பனர்கள் அடிக்கடி பொய் உரைப்பார்கள் இரட்டை நாவு உடையவர்கள் என்று விடுதலையில் பெரியார் & குத்தூசி குருசாமி எழுத்திலும் படித்துள்ளோம்.

ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதால் நாங்கள் கண்ணியமாக எழுதுகிறோம். ஆதாரமற்றவன் கண்ணியமில்லாமல் கண்மூடித்தனமாக எழுதுவார்கள். இந்த திங்களில் உலகபெரியாரிய வியாபாரி தனது பதிவில் ஆதாரமில்லாமல் எழுதியுள்ளார் கீழ்த்தரமாக....


சரி உலக வியாபாரிகளே.......

டம்லர் டளைவரின் துணைவியாரின் கைகளில் பெரிய தீக்காயம் இருப்பது எதனால்தானோ? அங்கே பெரியாரின் பெண்ணியம் எங்கே போய்விட்டது.....?

தி.மு.க. வெற்றிகொண்டான் பல மேடைகளில் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் பேசியுள்ளாரே..... தோழர் வெற்றிகொண்டான் பேச்சில் டம்லர் டலைவரின் மானம் காற்றில் பறந்ததே இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமா....?

சரி விடுங்கள் அது உங்கள் குடும்ப பிரச்சினை...

திடல் ரேவதி என்ற தோழரிடம் நீங்கள் காட்டிய பெண்ணியத்தைதான் நாங்கள் என்னவென்று சொல்வது......?

சரி விடுங்கள் பெண்ணியம் பேசிய பெரியார் திடலில் பெண் தோழர் வெண்மணியினை பெண் என்றும் பாராமல் உடைகளை கிழித்து அரத்தம் வர வர அடித்ததைதான் நாங்கள் மறப்போமா.......

ம்ம்ம் அது போகட்டும் நீங்கள் அமெரிக்காவிற்கு உல்லாச சுற்றுலா செல்லும் பொழுது உங்களுக்கு துணை வரும் பர்வீன் பானுவை பற்றிதான் நாங்கள் கேட்போமா....?

சரி சரி அது உங்கள் சொந்த விடயம்.

பெரியாரியவதிக்குதான் இயக்கமும் குடும்பமும் ஒன்று. உங்களுக்கில்லை அது.

இந்த உண்மைகளை ஆதாரத்துடன் நான் பேசுகிறேன்.

முடிந்தால் மறுப்பு தெரிவியுங்கள் டம்ளர் டளைவரிடம் பிச்சை வாங்கும் அடிமைகளே.

அவர் கொடுக்கும் பணத்துக்கு நீங்கள் எழுதிதான் ஆக வேண்டும் பிசிறுகளை..

செய்யுங்கள் செய்யுங்கள்....

நன்றி: பெரியார் திடலில் இன்றும் இருக்கும் பெரியார் தொண்டர்களுக்கு

Tuesday, August 12, 2008

தமிழர்களே விழிப்போடு இருங்கள்- உச்சிக்குடுமிகள் இதழ்களிடம்

சில கிழமைகளுக்கு முன்பாக ஈழப்போராட்டத்தைப் பற்றி ஒரு இதழில் கருத்துக்கணிப்பு வந்தது. அதைக்கண்ட தமிழர்கள் அந்த இதழ் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எண்ணிவிட்டார்கள்.

தந்தை பெரியார் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன் " பார்ப்பான் நம்மை எதிர்த்தால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் , பார்ப்பான் நம்மை புகழ்ந்தால் நமக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது "என்று அர்த்தம் என்று கூறினார்.

அந்த இதழின் அடையாள சின்னத்தை பாருங்கள் ஒரு உச்சிக்குடுமி பார்ப்பான் முகம் இருக்கும். தமிழன் தன் தாயகத்தில் அடிமையாக இழிவான நிலைக்கு சென்றதற்கு காரணமே அந்த உச்சிக்குடுமிகள்தான். உச்சிக்குடுமிகளின் வேலை தமிழனை அடிமையாக வைத்திருப்பதற்கான வேலைகளை செய்வது மட்டுமே. பார்ப்பன மஞ்சள் இதழ்களை புறக்கணிப்போம் தமிழர்களே.

கருத்துக்கணிப்பு எடுத்து தமிழீழ ஆதரவு மக்களின் தகவல்களை தமிழின எதிரிகளுக்கும் மற்ற பிரிவினருக்கும் போட்டுக்கொடுத்தார்களோ...?!

தமிழர்களே விழிப்போடு இருங்கள்!

பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)

நான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும். 1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர் பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.

அக்கால கட்டத்தில் பெரியார் திடல் கட்டடங்களை தனது மகனுக்கு கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்து அமெரிக்காவிலும் அலுவலகம் திறந்தனர் தனது மகனின் நிறுவனத்துக்கு. இப்பொழுது பெரியார் திடலில் MNC நிறுவனங்களை அவர் மகன் நடத்தி வருகிறார்.

இவற்றையெல்லாம் காப்பாற்ற முதல்வர் கலைஞருடன் இப்பொழுது இணைந்து கொண்டார். இப்பொழுது விடுதலை என்ற லேபிளில் முரசொலி இதழின் செய்திகள்தான் வருகிறது. பெரியாரின் கருத்துக்களை விடுதலை இதழில் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு மூலையில் ஒன்றோ இரண்டோ செய்திகள் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் தான் வைத்திருந்த கைத்தடியை ஓங்கியிருப்பார்.

பெரியார் தனது சொத்தாக சொன்ன தனது கருத்துக்களையும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாமர மக்கள் வாங்கும் விலையில் இதுவரை வெளியிடவில்லை. பாமர மக்கள் வாங்கும் விலைக்கு விடப்பட்ட பல புத்தகங்கள் அய்யா உயிரோடிருந்த பொழுது வெளியிடப்பட்டவை.

அய்யாவின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமு செல்ல வேண்டும் என்று எண்ணிய பெரியாரிய கொள்கை கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் பெரியாரின் கருத்துக்களும் எழுத்துக்களும் அனைத்து மக்களையும் சென்ற அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்பட்டுவருவது பிடிக்காத துணை அரசியல்வாதி(para politician) ஒருவர் பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தனியாருக்கு சொந்தமென்று வழக்கு தொடுக்கப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பானது பெரியாரின் கொள்கைகளை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாத காரணத்தால் பெரியாரின் கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட பெரியாரிய அமைப்புகள் இந்த வேலைகளை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர்.

இவர்கள் பெரியாரிய தொண்டர்கள் பெரியாரிய வியாபாரிகள் அல்ல.

யார் பெரியாரிய வியாபாரி என்பது இந்த மக்களுக்கு தெரியும்.

கலைஞர் அய்யா அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமை ஆக்க எண்ணிய பொழுது அதை தடுத்தவர் யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.

பெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.

பெரியாரியமே வெல்லும்!

Monday, August 4, 2008

பிரடெரிக் எங்கெல்சு இறப்பு- ஆகத்து 05 1895




உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.




மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.




தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தி அவர் வளர்வதற்காக தன்னையே கரைத்துகொண்டவர்தான் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.




எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவ ஞானி; எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.


Sunday, August 3, 2008

ஆன்டர்சென் இறப்பு

இவ்வுலகம் சொல்லக்கூடிய அழகற்றவர்கள் என்று ஒதுக்கக்கூடிய மக்கள் அறிவில் சிறந்தவர்களாகவும் படைப்பாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் இருப்பார்கள் என்பதை மெய்ப்பித்தவர்களில் ஒருவர்தான் ஆன்டர்சென். இவர் கி.பி. 1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள ஒதென்சி எனும் சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தையார் செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆன்டர்சென் அருவருக்கத்தக்க தோற்றமுள்ளவர் என்று அவரை உலகம் ஒதுக்கியது. ஆன் டர்செனின் 11-ஆம் அகவையில் அவரது தந்தையார் இறந்து போனார். மகனைக்காப்பற்றவும் பசியைப் போக்கவும் இவருடைய தாய் துணி துவைக்கும் தொழிலை மேற்கொண்டார்.
ஆன்டர்சென் வறுமையில் வாடினாலும் அறிவு வளர்ச்சியில் குன்றிவிடாமல் இருக்க பலரிடம் பல புத்தகங்களைக் கடன் வாங்கிப் படித்தார்.பள்ளியில் சேர்ந்து படிக்கும் பலரும் அவரது தோற்றத்தைப் பகடி செய்தனர். அதனைக் கண்டுகொள்ளாமல் எழுத்துப்பணியில் ஆர்வம் கொண்டார். தனிமையில் இருக்கும் நேரத்தில் தனது சிறிய அறை வீட்டையே நாடக அரங்கமாக்கி நடிப்புக் கலையைக் கற்றார். கதைகளை எழுதிப்பார்த்தார். இவருடைய ஆர்வத்தையும், செயல்பாட்டையும் கண்டு நான்காம் பிரெட்ரிக் இலக்கணம் படிக்க அனுப்பி வைத்தார். இளம் அகவையிலேயே முதல் இலக்கியப்படைப்பாக "THE GHOAST AT PALNATOKES GRAVE" என்ற நூலை வெளியிட்டார். இதனால் பல இடையூறுகளுக்கு ஆளானார். நாடகங்களை எழுத முயற்சி எடுத்த நேரங்களில் தோல்வியே தொடர்ந்தது. இருப்பினும் துவண்டுவிடாமல் தொடர்ந்து எழுதினார். அதில் "முன் சிந்தனை அற்றவன்",
"தேவதைக் கதைகள்" போன்ற நூலகள் அவருக்குப் புகழையும், பாராட்டுக்களையும் தேடித்தந்தன. இறுதிக்காலக்கட்டத்தில் மிகப்பெரிய புகழ்பெற்ற நாடகக்கலைஞராகவும் திகழ்ந்தார்.
தோற்றத்தால் பகடி செய்யப்பட்டு எழுத்தால் புகழ்பெற்ற ஆன்டர்சென் ஆகத்து நான்காம் நாள் இறந்தார். இவரது இறுதிச் சொற்கள் "அருவருப்பான வடிவமுடையவனானாலும் இந்த அழகான உலகத்தில் இறக்கின்றேன்" என்பதுதான், ஒரு மாந்தரின் வாழ்வு புற அழகுத்தோற்றத்தைப் பொறுத்தது அல்ல; மாறாக ஈடுபாடான செயல்களைப் பொறுத்தது என்பதற்கு இவரது வாழ்வு ஒரு நற்சான்று.

Saturday, August 2, 2008

சிங்கப்பூரில் தமிழுக்காக போராடிய பெரியவர் ப.கண்ணுச்சாமி

உலகம் முழுவதும் பரவி புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் தாய்மொழி தமிழை காக்க
அயலான் நாட்டிலும் அயராது உழைத்துவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில்
ஒருவர்தான் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த அய்யா பெ.கண்ணுச்சாமி பெரியவர்
அவர்கள்.

சிங்கப்பூரில் இத்திரிட் எனுமிடத்தில் 03.08.1914-ஆம் நாள்
திரு.பக்கிரிசாமி- மங்களம் அம்மையாருக்கு மகனாக ப.கண்ணுச்சாமி பெரியவர்
பிறந்தார். சிங்கப்பூரில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களைவிட
தொடர்வண்டி நிலையத்தில் கடைநிலை ஊழியவர்களாக அடிமைகளாக இருந்தவர்களின்
எண்ணிக்கை மிக அதிகம். அக்காலகட்டத்தில் மலாய் மொழி தெரிந்த நபர்களுக்கு
மட்டுமே சிங்கப்பூரில் மதிப்பு இருந்தது.

அக்காலகட்டத்தில் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கற்ற பெரியவர் கண்ணுச்சாமி
தமிழ்மீது தணியாத தாகம் கொண்டிருந்ததால் தமிழை தனிக்கல்வி சென்று
கற்றார்.
சிங்கப்பூரில் பொது அறிவிப்புகள் , பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும்
தமிழ் மொழி இருக்கவேண்டும் என்பதை நடைமுறையாக்கிட அரசு அலுவலகங்களுக்கு
மனு எழுதி செயல்படுத்தினார். "சூச்சியாவ் மார்க்கெட்டிங்"பெயரைத்
தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப்போராடி
வெற்றிபெற்றார். 1960 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் அரசாங்கக்குத்தகைகளின்
உடன்பாடு அறிவிப்புகள் தமிழில் எழுதப்படல் வேண்டும் என்று கோரி, தமிழ்
மட்டுமே தெரிந்த குத்தகைக்காரர்களுக்காகப் பாடுபட்டார். நலவாழ்வு,மைய
நலநிதிக்கழகம், போக்குவரத்துத்துறை, தொலைத்தொடர்பு வாரியம் போன்ற
அரசுப்பணி அமைப்புகளின் தொடர்புகள் அனைத்தும் தமிழ் வழிப்படுத்தப்பட
வேண்டும் என்பதற்காகப் போராடினார். இதனால் இவர் கோரிக்கை கண்ணுச்சாமி
என்ற அடை மொழி பெற்றார்.

இவர் சிங்கப்பூர் தமிழ்மன்றத்தின் தொடக்ககால உறுப்பினராவார். "கேட்க
நமக்கு உரிமை இருக்கிறது; உரிமைகளைப் பெறுவது நமது கடமை; இதை நாம்
முறையாகக் கேட்கும் போது அரசும் முறையாகச் செயல்படும்" என்பது இவரது
கொள்கை. சிங்கப்பூரில் அரசு தொடர்பான அனைத்து அறிக்கைகள் , அறிவிப்புகள்,
இயக்கங்கள் கையேடுகள், சட்டங்கள் எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெற வேண்டும்
என்று உறுதியோடு உழைத்தவர் பெரியவர் ப.கண்ணுச்சாமி. இவர் தனது 85-ஆம்
அகவையில் 21.09.1999 அன்று காலமானார்.