Wednesday, February 25, 2009

கோவில்களில் பூணூல் அய்யர்வாள் , வலைப்பூக்களில் CPIML SOC மக இக அய்யர்வாள்

என்ன நண்பர்களே

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ?

நான் எப்பொழுதுதாவதுதான் இணையத்துக்கு வர இயலும். நான் மட்டுமல்ல இங்குள்ள பல தமிழுணர்வாளர்களும் அப்படிதான்.

ஆனால் எந்நேரமும் தமிழ்மணத்தில் நாம் CPIML SOC அய்யர்வாள்களைக்காணலாம்.

கோவில்களில் பூணூல் போட்ட அய்யர்வாள் என்றால் வலைப்பூக்களில் பூணூலின் மேல் செஞ்சட்டை போட்ட CPI ML SOC மக இக அய்யர்வாள்களைக்காணலாம்.

புரட்சி மார்க்சியம் என்று எந்நேரமும் வலைபூக்களில் எழுதிக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக வினருக்கு வேலையே குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதுதான் போலும் இல்லையென்றால் பி.இரயாகரனிடம் இருந்து தடசணை வராது அல்லவா.

கோவிலில் தட்டிலே காணிக்கை , இவர்களுக்கு தமிழர்களை குழப்பினால் பிரான்ஸ் இரயாகரனிடமிருந்து தட்சணை.

இங்கு ஆயுதப்புரட்சி என்று குழப்புவார்கள் , மற்ற இடத்தில் நடந்தால் அது பாசிச கொடுங்கோன்மை என்பார்கள். அவர்களின் ஏடான புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் போன்ற இந்து, தினமலம் போன்றவற்றிற்கு நிகரான பொறுத்தருளவும் இந்து , தினமலம் போன்றவற்றைவிட தமிழர்களை வெறிப்பிடிக்க வைத்து குழப்பும் இதழ்களான CPI ML SOC இதழ்களை பல ஆண்டுகளாக படித்து வருபவர்களுக்கு உண்மையில் மண்டை குழம்பி கீழ்பாக்கம் தான் போக வேண்டும்.


1998 இல் இட ஒதுக்கீடு கூடாது. இட ஒதுக்கீடு வேண்டாம் ,

2005 இல் இட ஒதுக்கீடுக்காக போராடும் ஒரே அமைப்பு நாங்கள்தான் என்பார்கள்.

இவர்களின் கட்சி திட்டத்தினை பார்த்தால் 85 இலட்சம் கோடி ஆண்டுகள் புனிதம் மிக்க நம் நாடு என்பார்கள்.

மார்க்சிய மூலக்கூறில் பொருள் முதல்வாதம் , கருத்து முதல்வாதம் ........ என்று பார்த்தால் மார்க்சு புனிதம் என்பதே தவறானது என்றுள்ளார் என்பார்கள்.


நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.

அந்தர் பல்டி என்றால் முறையாக அடிக்க cpi ml soc மக இக யிடம் கற்றுக்கொள்ளலாம்.

இவர்களது வேலை " பசியால் துடிக்கும் ஒருவனிடம் சென்று உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் இவர்கள்தான் உன்னைப்போல் ஆன மற்றவர்களை உன்னுடன் சேர்த்து அமைப்பாகி போராடு என்று அவனை குழப்பிவிட்டுவிட்டு போய்விடுவார்கள் "

தூண்டி விட்டுவிட்டு போய்விடுவார்கள் ஆனால் பசியில் இருக்கும் அவனுக்கு உணவு தரமாட்டார்கள்.

கேட்டால் இப்படி ஆயி அப்படி ஆயி இப்படி வந்து னு... இழுத்துக்கிட்டே போவார்கள்.

அவன் அப்படியே பசியாலும் மூளை குழம்பியதாலும் செத்து சீரழிவான்.

இதுதான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக விலிருக்கும் அடிமட்ட தொண்டனின் நிலை. இப்படிப்பட்ட நிலைதான் குளுகுளு அறையில் இராயகரனின் தட்சணைக்காக எழுதும் ஒருவரின் கருத்துப்படத்தினை வெளியிட்ட அந்த அப்பாவி 5 நபர்களின் நிலை.

மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆயுதமா?
அப்படியென்றால அதை நாம் எடுப்போம் - பார்ப்பனியர்கள்

இணையதளம் உலகம் முழுக்க தமிழர்களின் நிலையை சொல்லுமா அப்படியானால் இணையத்திலே நாம் தமிழால் தமிழர்களை குழப்புவோம் ஒன்று சேரவிடாமல் சிதைப்போம் - நவீன பார்ப்பனியர்கள்.

ஆனால் என்ன மக இக , புமாஇமு வில் உள்ள அடிமட்டத்திலுள்ள அத்தொண்டர்களுக்கு மக இக என்பதும் அரசியல் கட்சிதான் என்பதும் அவ்வளவாக தெரியாது. அவர்கள்தான் CPI ML SOC என்பது என்று அவர்களுக்கு அது தெளிவாக தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் தானாகவே மக இக விலிருந்து விலகுகிறார்கள். இதை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.

என்ன இன்னும் நம் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட பார்ப்பனியர்களின் தந்திரம் தெளிவாக தெரியவில்லை. வலைப்பூக்களின் உலாவும் தமிழர்களே தமிழினத்தினை சிதைக்கும் மக இக CPI ML SOC இடமிருந்து விழிபோடு இருங்கள்.

No comments: