Friday, March 7, 2008

திருவள்ளுவர் - ஒரு நாத்திகர்- ஆழிக்கரைமுத்து

மனுதர்மம் - கடவுள் ஸ்ரீவிஷ்ணு அருளியது.

பைபிள் - கடவுள் யெகோவா அருளியது.

குரான் - அல்லாஅருளியது.

ஆனால் திருக்குறள் மனிதர் மனிதருக்காக அருளியது. எனவேதான் திருக்குறள் மக்களிடம் பரவவில்லை. திருவள்ளுவரும் திருக்குறளை கடவுள் அருளியது என்று சொல்லியிருந்தால் திருக்குறளும் ஒரு மதத்தின் வியாபாரமாக பரவியிருக்கலாம்.

நாம் வாழும் பூமியானது கதிரவனிடத்தில் இருந்து வந்தது என்பது உலகறிந்த உண்மை.

பைபிளில் உலகம் தட்டையானது என்று உள்ளது. உலகம் உருண்டை என்ற உண்மையைக்கூறியதால் அறிஞர் கலிலியோவை இந்த உலகம் அடித்துக்கொன்றது.

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"
இதில் பகவன் என்பது கதிரவன் என்ற அர்த்தத்தை உடையது.

திருக்குறளில் மறைமுகமாக வள்ளுவர் அவர்கள் இவ்வுலகம் தோன்றிய உண்மையை கூறியுள்ளார். இக்காலகட்டத்திலேயே நாம் ஒரு உண்மையைக்கூறினால் நமக்கு எற்படும் பாதிப்புகள் ஏராளம். அப்படியென்றால் பார்ப்பனியம் தலைவிரித்தாடிய 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

திருக்குறளை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் மனதில் அன்பும், பண்பும் , அறிவும் வளரும்.

எ.கா: தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக்கூலி தரும்.

இதில் கடவுளை நினைத்து நடக்கவில்லையென்றாலும் நீ உண்மையில் முயற்சிசெய்தால் நீ கண்டிப்பாக வெற்றிபெறுவாய் என்று வஞ்சிப்புகழ்ச்சி அணிபோல் மறைமுகமாக கடவுள்மறுப்பை நிலைநாட்டுகிறார் வள்ளுவர்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்..... 666

அசைவிலா மனத்தன்மை படைத்தவராக கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் நீ எண்ணிய செயலில் கண்டிப்பாக வெற்றி அடைவாய் என்று மனித இன முன்னேற்றத்தை மட்டுமே வள்ளுவம் வலியுறுத்தி வருகிறது.
-ஆழிக்கரைமுத்து

1 comment:

ILA (a) இளா said...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு